6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்? ஜஸாகல்லாஹ்-அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன். 7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ? தும்மினால் நான்அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன். 8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ? யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன். 9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ? யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன். 10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ? அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.